வெள்ளி, 8 மே, 2020

                              பாவம் அது

அதன் கால்களை
எண்ணுகின்றான்

உயிர்‌ ஊசலை இரசிக்கிறான்

தலையை
எத்தனைமுறை
சுற்றுகிறதென
அவதானிக்கிறான்

தன்மேல்
படரவிட்டு
படரவிட்டு
படரவிட்டு
கடிவலியை
உணர்கிறான்

தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுத்
தப்பிக்க விட்டுச்
சிறைப்பிடிக்கிறான்

சில நேரங்களில்
தாயாய்
விளையாட்டுப்பொருளாய்
உணவுப் பொருளாக
எதிரியாய்
எறும்பாகவும்
குழந்தையின்
கையில் கிடக்கிறது
எறும்பு

மாண்புமிகு
நீதிபதியே
என் மரணத்தை
உடனே அறிவியுங்கள்
மன்றாடுகிறது
பாவம் அது

சொர்க்கம் நிச்சயம்

                                     - நம்தேவ்


6 கருத்துகள்:

Unknown சொன்னது…

Arumai

Balamurugan.p சொன்னது…

அருமை நண்பரே

செந்தில் பாவா சொன்னது…

நன்று

www.Namdev.com சொன்னது…

நன்றி

T Subramanian சொன்னது…

சிறுவயது ஞாபகம்...

www.Namdev.com சொன்னது…

நன்றி

                    எங்கள் வீட்டு வேப்பமரம் நீ சுயம்பு எங்கள் பெரியவர்களில் யாரோ பறவைகளில் எதோ சிறுவர்களாக இருந்த நாங்க...